For Quick Alerts
For Daily Alerts
Just In
முதுமலையில் யானைகளுக்கு விரைவில் "கிளினிக்"
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில்அனைத்து வசதிகளும் நிறைந்த சிகிச்சை மையம் விரைவில் துவக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் நடந்த வன விலங்குப் பாதுகாவலர்களுக்கான யானை பராமரிப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில்அவர் பேசுகையில், வனப் பகுதிகளில் காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இந்த சிகிச்சைமுகாமில் சிகிச்சை அளிக்கப்படும்.
வனப் பகுதியிலேயே இது அமைக்கப்படுவதால் காயமடைந்த விலங்குகள் உடனடியாக சிகிச்சை பெறும்வாய்ப்புகிடைக்கும்.
இதனால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் பரிதாபம் தவிர்க்கப்படும் என்றார்.
Comments
Story first published: Monday, November 4, 2002, 5:30 [IST]