Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி சீட்டு பிடித்த இளம் பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சீட்டுப் பிடித்தவர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருள் கொடுக்க இயலாததால் 24 வயதுப் பெண் தற்கொலைசெய்து கொண்டார்.

சென்னை தி.நிகர் தெற்கு போக் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் டெலிபோன் பூத்வைத்திருந்தவர் மலர்மொழி.

தீபாவளிக்கு ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் போன்றவற்றை கொடுப்பதாக கூறி 100 பேரிடம் பணம்வசூலித்து வந்தார். இவரிடம் வாரந்தோறும் பணம் கொடுத்து வந்தனர் பொது மக்கள். ஒவ்வொருவரிடமும் ரூ.500 வரை வசூல் செய்திருந்தார்.

ஆனால், தீபாவளி நெருங்கிய சமயத்தில் அவரால் இந்தப் பொருட்களை வாங்க இயலவில்லை. பணத்தை தனதுகுடும்பச் செலவுக்கு எடுத்துவிட்டார்,

இந் நிலையில் வாடிக்கையாளர்கள் தீபாவளிப் பொருள்களைக் கேட்கத் தொடங்கினர். இதையடுத்து தனது தாயார்பட்டம்மாளிடம் ரூ. 1லட்சம் கடனாக கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார்.

இதையடுத்து தனது நிண்பரும், ஆட்டோ டிரைவருமான ஆனந்த்திடம் கேட்டுள்ளார். அவரும் தர மறுத்துவிட்டார்.

இதனால் மனம் உடைந்து போன மலர்மொழி, ஆனந்த்தின் வீட்டுக்குப் போய் அங்கிருந்த மண்ணெண்ணெயைஉடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அந்தப் பகுதியே குலுங்கும் அளவுக்கு பெரும் அலரலுடன் அவர் கருகி விழுந்து இறந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+