சேது எக்ஸ்பிரஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது
ராமேஸ்வரம்:
சென்னை தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில், அதிர்ஷ்டவசமாக பெரும்விபத்திலிருந்து தப்பியது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்ற இடத்தில், ரயில்வே தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்தது.அப்போது சேது எக்ஸ்பிரஸ் ரயில் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.
தண்டவாள விரிசலைப் பார்த்த கேட் கீப்பர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்துஉடனடியாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த உடனடி நடவடிக்கை காரணாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
இதுதவிர ராமேஸ்வரம்-திருச்சி பாசஞ்சர், ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர், தாம்பரம் எக்ஸ்பிரஸ்,ராமேஸ்வரம்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பாலம் சீரமைக்கப்பட்ட பின்னர் சில மணி நேரங்கள் தாமதமாக அவை புறப்படடுச் சென்றன.
-->












Click it and Unblock the Notifications