"மதுரையில் அடுத்த ஏப்ரல் முதல் உயர் நீதிமன்றக் கிளை செயல்படும்"
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படத் துவங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறினார்.
நாடு முழுவதும் சட்டப்பணிகள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்துசென்னையில், நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது, நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியதாவது:
அனைருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும், விரைவாக நீதி கிடைக்க வேண்டும், நீதிதித்துறை சம்பந்தமான அறிவுஅனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 1997ம் ஆண்டு ஒரு சட்டம் அமல் படுத்தப்பட்டது.
இந்த 3 நோக்கங்களுக்காக சட்டப்பணிகள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டம் வெளியிடப்பட்டநாள் 09.11.1997 என்பதால், ஆண்டு தோறும், நவம்பர் 9ம் தேதியை சட்டப்பணிகள் தினமாகக்கொண்டாடுகிறோம்.
சட்டப்பணி முகாம்கள் மூலம், மக்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 49 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இவற்றில் 30விரைவு நீதிமன்றங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்படத் துவங்கும். முதல்கட்டமாக 10ம் தேதி காஞ்புரத்திலும்,செங்கல்பட்டிலும் 2 விரைவு நீதிமன்றங்கள் துவங்கப்படுகின்றன.
மீதமுள்ள 19 விரைவு நீதிமன்றங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் துவங்கும்.
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக அதற்கு ரூ.37கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, கட்டுமானப் பணிகளில்தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், விரைவில் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அது செயல்படத்துவங்கும் என்றார் நீதிபதி சுபாஷன் ரெட்டி.












Click it and Unblock the Notifications