""98 சதவீத மக்களுக்கு என்ன செய்தீர்கள்?""- ஜெ.க்கு இளங்கோவன் கேள்வி
சென்னை:
"2 சதவீத அரசு ஊழியர்களுக்கு ஒன்றும் செய்ய விரும்பாத அதிமுக அரசு மீதமுள்ள 98 சதவீத மக்களுக்காகசெய்துள்ள நல்ல காரியங்கள் தான் என்ன?" என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன்கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதமே உள்ள அரசு ஊழியர்களுக்காக எவ்வளவு தான் செய்வது,அவர்களுக்கே செய்து கொண்டிருந்தால் மற்ற மக்களுக்கு என்ன தான் செய்வது என்று புலம்பியுள்ளார் முதல்வர்ஜெயலலிதா.
நான் அவரைப் பார்த்து கேட்க விரும்புவது: 2 சதவீத அரசு ஊழியர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறியுள்ள நீங்கள் மீதமுள்ள 98 சதவீத மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளீர்கள்?
சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியாகி விட்டது. நெசவாளர்களை வறுமையில் வாட விட்டீர்கள்.இலவச வேட்டி, சேலையை நிறுத்தி விட்டாயிற்று. இலவச மின்சாரம் நிற்கப் போகிறது. நெல் கொள்முதல் நின்றுவிட்டது. அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சமத்துவபுரம் திட்டம் என அத்தனை மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
இத்தனையையும் செய்து விட்டு 98 சதவீத மக்களுக்காக நல்லது செய்யப் போகிறேன் என்று ஜெயலலிதாகூறுவாரேயானால் அதை யாரும் நம்ப மாட்டார்கள்.
பதவிக்கு வந்தவுடனேயே கஜானா காலியாகி விட்டது என்று கூறுகிறது அதிமுக அரசு. மாயமந்திரம் ஏதும் நடந்துகஜானா காலியாகி விட்டதா என்று கேட்டுள்ளார் இளங்கோவன்.
-->












Click it and Unblock the Notifications