மாறனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலிமாறன் மேல் சிகிச்சைக்காக அடுத்த ஓரிரு நாட்களில் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.
மாறனுடைய செயற்கை இருதய வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதால் அவருடைய உடல் நலம்பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 23ம் தேதி அவர் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்து பூஞ்சை தாக்கிய செயற்கை இருதய வால்வு அகற்றப்பட்டு, வேறொரு வால்வுபொருத்தப்பட்டது. ஆனாலும் பூஞ்சைத் தொற்று அவருடைய ரத்தத்தில் கலந்து விட்டதால், மாறனின் சிறுநீரகம்,நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து மாறன் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருகிறார். அவருடைய சிறுநீரகத்திற்குச் சென்று வரும்ரத்தம் தினமும் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்படுகிறது (டயாலிசிஸ்). அப்பல்லோ டாக்டர்களும் அவரைதினமும் 24 மணி நேரமும் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரும் மாறனின் மாமாவுமாகிய கருணாநிதி இன்று காலை பிரதமர் வாஜ்பாயுடன்தொலைபேசி மூலம் பேசினார். அப்போது மாறனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து இருவரும்பேசினர்.
இதையடுத்து திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாறனுக்கு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ளஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் அவர்அங்கு கொண்டு செல்லப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் மாறனை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications