பரம ஏழைகளுக்குத்தான் இலவச வேட்டி-சேலை: பன்னீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேட்டி சேலை வாங்கும் திறன் இல்லாத பரம ஏழைகளுக்கு மட்டுமே, இந்த ஆண்டு இலவச வேட்டி சேலைவழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

கடந்த 1991ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலைகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு இவ்வாறு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் கிராமப்புறங்களில் ரூ.269.07க்கு குறைவாகமாதவருமானம் உள்ளவர்களுக்கும், நகர்ப்புறங்களில் ரூ.381.04க்கு குறைவாக மாத வருமானம் உள்ளவர்களுக்குமட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 80 லட்சம் சேலைகளும், 73 லட்சம் வேட்டிகளும் ரூ.110 கோடி செலவில் வழங்கப்பட்டன. இந்தஆண்டு, 43 லட்சம் குடும்பத்தினருக்கு மட்டும், ரூ.90 கோடி செலவில் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து முதல்வர் பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

இலவச வேட்டி, சேலை வழங்குவதை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். வேட்டி, சேலை வாங்கும் திறன்உள்ளவர்களுக்கு இனி இலவசமாக வழங்கப்படமாட்டாது.

தமிழகத்தில் தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழர் மீட்புப் படை ஆகிய 2 தீவிரவாத அமைப்புக்களையும்தடைசெய்ய தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த அமைப்புக்கள் இந்திய அளவில்தடைசெய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ் குறித்து பேச்சுவதார்த்தை நடந்துவருகிறது. விரைவில் ஒரு நல்லமுடிவு எட்டப்படும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+