For Daily Alerts
Just In
கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து ஆளுநரிடம் சிறுபான்மையினர் மனு
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவை ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஒப்புதலுக்கு அனுப்பக் கூடாதுஎன்று வலியுறுத்தி சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தேவசகாயம், எஸ்ரா சற்குணம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர்ஹைதர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டோர்ஆளுநரைச் சந்தித்தனர்.
ஆளுநர் ராமமோகன் ராவை ராஜ் பவனில் சந்தித்த அவர்கள், "கருப்புச் சட்டமான" கட்டாய மதமாற்றத் தடுப்புச்சட்ட மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் ஆளுநரிடம் அவர்கள் விளக்கிக் கூறினர்.
-->
Comments
Story first published: Saturday, November 9, 2002, 5:30 [IST]