புகை கக்கும் வாகனங்கள் சபரிமலைக்கு வரத் தடை
திருவனந்தபுரம்:
இந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது புகையைக் கக்கிக் கொண்டு வரும் வாகனங்களை மாநிலத்துக்குள் நுழையவிட மாட்டோம் என கேரள மாநிலம் அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுள் சபரிமலையும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் கோவிலுக்குஆண்டு தோறும் லட்சணக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து வருவார்கள். இந்த ஆண்டு இன்னும் சிலதினங்களில் இந்த சீசன் ஆரம்பிககிறது.
கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்இங்கு வாகனங்களில் வருவார்கள்.
சீசன் நேரத்தில் வாகனப் போக்குவரத்து இந்தப் பகுதிகளில் அதிகமாக இருப்பதால், அது சுற்றுப்புற சூழ்நிலையைமாசுபடுத்துகிறது.
இதனால் இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்இல்லாமல் வந்தால், அவை கேரள மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படாது என்று அம்மாநில வாகனமாசுக்கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications