கூலிப்படைகளை ஒடுக்க வீரமணி வலியுறுத்தல்
சென்னை:
தமிழகத்தில் செயல்பட்டுவரும் கூலிப்படைகளை அடியோடு அழிக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கூலிப்படையினரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது இவர்கள்அடியோடு அழிக்கப்பட வேண்டும்.
காவல் துறை மக்களாட்சியில் மிக சிறப்பாக செயல்பட வேண்டிய துறை. மின்னணு கருவிகள், சக்தி வாய்ந்ததுப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் காவல் துறையை நவீனபடுத்திவிட முடியாது.
குற்றவியல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் நியமித்து பல இடங்களில்பெருகி வரும் ரவுடிகளை அடக்குமாறு அதிமுக அரசு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.அவர்களுக்கு தனி அதிகாரம் தேவையென்றால் அதையும் அரசு அளிக்க வேண்டும்.
மும்பையில் நடைபெறுவது போல் சென்னையிலும் ரவுடிகள் ராஜ்யம் வேகமாக பரவி வருகிறது. இது மிகவும்ஆபத்தானது. தற்போது தமிழகத்தில் 300 தாதாக்கள்,கூலிப்படைகள், ரவுடிகள் இயங்குவவதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.
அவர்கள் அனைவரையும் அடியோடு அழித்து தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தஅறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications