5 புதிய அமைச்சர்கள் 13ம் தேதி பதவியேற்பு
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் வரும் 13ம் தேதி பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
கடந்த 9ம் தேதி பி. தனபால், கே. சுதர்சனம் மற்றும் வா.து. நடராஜன் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கும் கல்தாகொடுத்த முதல்வர் ஜெயலலிதா, புதிதாக ஐந்து அமைச்சர்களைச் சேர்த்தார்.
ஏ. அன்வர் ராஜா, ஆர். வைத்திலிங்கம், ஏ. பாப்பாசுந்தரம், பி.வி. தாமோதரன் மற்றும் ஆர். வடிவேல்ஆகியோருக்குத் தான் அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளன.
இவர்களில் அன்வர் ராஜாவும் வைத்திலிங்கமும் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் தான்.
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் ஐந்து பேரும் வரும் 13ம் தேதி பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆளுநர்மாளிகையான "ராஜ் பவன்" வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்க ஆளுநர் ராமமோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications