5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புயல் எந்த நேரத்திலும் கரையைக் கடக்கலாம் என்பதால் தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் உள்ளபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று நள்ளிரவிலோ அல்லது நாளை காலையிலோ கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம்அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ளபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் பயம் நீங்கிய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications