தூத்துக்குடி-கொழும்பு இடையே 22ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கும் இடையே வரும் 22ம் தேதி கப்பல் போக்குவரத்துதொடங்குகிறது.
இதற்கான ஒப்பந்தம் வரும் 21ம் தேதி தூத்துக்குடியில் கையெழுத்தாகவுள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.பி. கோயல் மற்றும் இலங்கை கப்பல் போக்குவரத்துத் துறைஅமைச்சர் அகமது ஆகிய இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.
கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவில் இந்த இருவர் தவிர கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்திருநாவுக்கரசரும் கலந்து கொள்கிறார்.
தூத்துக்குடி-கொழும்பு இடையே வாரத்திற்கு 3 நாட்கள் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications