சென்னை சாலைகளை சரி செய்யக் கோரி 15ம் தேதி ஸ்டாலின் போராட்டம்
சென்னை:
கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர சாலைகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றுகோரி முன்னாள் மேயரும் திமுக இளைஞரணி செயலாளருமான ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த முறை ஸ்டாலின் மேயராக இருந்த போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரிலேயேசென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.
ஆனால் தற்போதோ மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக சென்னை மாநகரமே மழையால் சீர்குலைந்துபோயுள்ளது. சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரியும், பழுதுபட்டசாலைகளை உடனடியாகச் செப்பனிடக் கோரியும் வரும் 15ம் தேதி சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள்நடத்தவுள்ளோம்.
சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஏழாவது மண்டல அலுவலகம் முன் ஸ்டாலின் தலைமையிலும், ஐந்தாவது மண்டல அலுவலகம் முன் முன்னாள்அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications