சர்க்கஸ் கோமாளியும் அமைச்சரவை மாற்றமும்: கருணாநிதி கிண்டல்
சென்னை:
அதிமுக ஆட்சியில் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நீக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளதாகதிமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்க்கஸ் கூடாரத்தில் நாயகனும், நாயகியும் பங்கேற்று அற்புதமான, ஆச்சரியம் விளைவிக்கக் கூடிய, ஆபத்துநிறைந்த ஆட்டங்களில் ஈடுபடுவார்கள்.
கூடாரத்தின் உச்சியில் கயிற்றால் ஆன ஊஞ்சல்கள் கட்டி தொலைவில் உள்ள மற்றொரு ஊஞ்சலுக்குத் தாவிப்பாய்ந்திடுவார்கள்.
அப்படிப் பாயும் போது அந்தரத்தில் பாய்ந்து வரும் வீரர் அல்லது வீராங்கனையின் கை அல்லது காலைப் பற்றிக்கொண்டு மற்றொரு ஊஞ்சலுக்குத் தாவுவார்கள்.
வேறு சில வீரர்கள் நீண்ட கம்பியில் சைக்கிள் சவாரி செய்து கொண்டிருப்பார்கள். கையில் 20 பந்துகளை வைத்துக்கொண்டு ஒன்றைக் கூட கீழே தவற விடாமல் அவற்றை வீசி மாறி மாறி கைகளில் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.நெருப்பு வளையத்துக்குள் நுழைந்து உடலில் தீக்காயமே படாமல் லாவகமாக வளைந்து வெளியே வருவார்கள்.
இந்த அபாயச் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, பார்வையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பும்வகையில் சர்க்கஸ் விதூஷகர் (கோமாளி) ஒருவர் வருவார்.
அவரும் அந்த வீரர்களைப் போலவே செய்ய முயன்று கம்பியிலிருந்து கீழே விழுந்தோ, பந்துகளைத் தவறவிட்டோ, சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளிடமிருந்து தப்பி ஓடியோ பார்வையாளர்கள் மத்தியில்சிரிப்பலையை ஏற்படுத்துவார் அவர். இதை நாமும் கண்டிருக்கிறோம்.
இந்த சர்க்கஸ் விதூஷகத் தனத்தை சர்க்காரிலும் காண இயலும் என்பதற்கு அதிமுக அரசு தான் சிறந்த உதாரணம்.கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டும், சேர்க்கப்பட்டும், நீக்கப்பட்டும்வந்துள்ளனர்.
இந்த ஒன்றரை ஆண்டுகளில் இது போன்ற சர்க்கஸ் நிகழ்ச்சிகள் பல கேலிக் கூத்துகளுக்கிடையே வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
அமைச்சர்களை நீக்குவதும், புதிதாக நியமிப்பதும், நீக்கியவரை மீண்டும் சேர்ப்பதும், சேர்த்தவரைத் தூக்கி எறிந்துபந்தாடுவதும் முதல்வருக்கே உரிய உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது, தட்டிக் கேட்கவும் இயலாது.
அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் உரிமையாக இருக்கலாம். இருப்பினும், காரண காரியங்களேஇல்லாமல் அதை செய்வது சரியாக இருக்காது.
சிலர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்கள். மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகு அவர்கள் பெற்றுள்ளஅமைச்சர் பதவியைக் காப்பதில் தான் இனி கவனம் செலுத்துவார்களே தவிர மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்து நினைக்க அவர்களுக்கு நேரம் இருக்காது என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-->
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications