மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து பேரணி: தலித் அமைப்புகள் முடிவு
சென்னை:
தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 9ம் தேதி பல தலித்அமைப்புகளும் சிறுபான்மை அமைப்புகளும் ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளன.
சென்னையில் இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம்பேசுகையில்,
தலித் மக்களுக்கும், சிறுபான்மை மதத்தினருக்கும் எதிராகத் தான் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசுகொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தலித் மற்றும்சிறுபான்மை அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் வரும் டிசம்பர் 9ம் தேதி இந்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்தவுள்ளோம். ஆளுநர்மாளிகையான ராஜ் பவனை நோக்கி இந்தப் பேரணி நடத்தப்படும்.
தலித் மற்றும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் இந்தப் பேரணியில் பங்கேற்பார்கள்.
கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ஆதரித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேசி வருவது கடும்கண்டனத்துக்குரியது என்றார் கிருஷ்ணசாமி.
-->












Click it and Unblock the Notifications