வெடிகுண்டு புரளி: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை::

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்துஅங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்தவமனை மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.

கண் சிகிச்சைக்காக இந்தியா முழுவதிலுமிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து சிகிச்சைபெற்றுச் செல்வது வழக்கம்.

இவர்கள் தவிர மேலும் நூற்றுக்கணக்கான கண் நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அரவிந்த் மருத்துவமனைக்கு நேற்று இரவு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.மருத்தவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் பேசிய நபர் கூறினான்.

இதையடுத்து மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கு உடனடியாகத் தகவல்தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டனர்.

இதற்குள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு இருக்கிறதா என்று அரவிந்த்மருத்தவமனை முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர்.

ஆனால் எந்த இடத்திலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவந்த தொலைபேசித் தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.

வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரிந்ததும் மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும்,நோயாளிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

வெடிகுண்டு புரளியைக் கிளப்பியவன் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+