Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 2 கல்லூரிகளின் மாணவர்கள் கடும் மோதல்: 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நடு ரோட்டில் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.இது தொடர்பாக 4 மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

நந்தனம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த சிலமாணவர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியான பரபரப்பு மிகுந்த தி. நகரின் வடக்கு உஸ்மான் சாலையில் இருகல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இன்று காலை திடீரென்று கடுமையாக மோதிக் கொண்டனர்.

ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள்பதறியடித்தக் கொண்டு ஓடினர்.

தகவலறிந்து விரைந்து வந்த பாண்டி பஜார் போலீசார் மாணவர்களை விலக்கி விட்டு, அப்பகுதியில் அமைதியைஏற்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக சாந்தகுமார், சண்முகம், நந்தகுமார் மற்றும் விஸ்வாஸ் ஆகிய நான்கு மாணவர்களைப்போலீசார் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+