For Daily Alerts
Just In
சுப வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன் காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்க நிர்வாகிகளின் சிறைக் காவல் வரும் 22ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்தது தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகிகளான சுப. வீரபாண்டியன்,பாவாணன், டாக்டர் தாயப்பன் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த மூவரும் சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
சுப. வீரபாண்டியன் வழக்கில் நடந்து வரும் விசாரணை குறித்த அறிக்கையை நீதிபதியிடம் அரசு வக்கீல்ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிபதி ராஜேந்திரன் அவர்களது காவலை வருகிற 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Comments