பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 40 மாணவர்கள் காயம்: ஜெ. நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மேற்கூரை கன மழை காரணமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது.இதில் 40 மாணவர்கள் காயமடைந்தனர்.

கொருக்குப்பேட்டையில் உள்ள கொடுங்கையூர் காலனி பகுதியில் சி.எஸ்.ஐ. பள்ளி உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையினால் இந்தப் பள்ளியின் மேற்கூரை பலமிழந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அப்போது வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு ஆசிரியரும், 40 மாணவர்களும் இடிபாடுகளுக்குள்சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து,இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

காயமடைந்த அனைவரும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தப் பள்ளி 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். எனவே பள்ளியின் சுவர்கள் அனைத்தும் மிகவும்பலவீனமானதாக உள்ளதாகப் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

ஜெ. நிதியுதவி:

இதற்கிடையே இவ்விபத்தில் காயமடைந்து, கால் முறிவு ஏற்பட்டுள்ள முதலாவது வகுப்பு மாணவன் அஜீத்தின்சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.6,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சட்ட அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று சேதத்தைப் பார்வையிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+