குடிநீருடன் வந்த சாக்கடை நீர்: சென்னையில் மக்கள் சாலை மறியல்
சென்னை:
சென்னையில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
சென்னை நகரில் சமீபத்தில் பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகள் இன்னும் கூட நீரில் மூழ்கியுள்ளன.
தி. நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை அகற்றுமாறு கோரி மாநகராட்சிக்கு மக்கள்கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வடக்கு தி. நகர் பகுதியில் உள்ள சில தெருக்களில் தெருவில் தேங்கிக் கிடக்கும் மழை நீருடன்சாக்கடை நீரும் சேர்ந்து, குடிநீர் குழாய்களில் கலக்க ஆரம்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வள்ளுவர் கோட்டம் எதிரே கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களைகலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-->