மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் சேர்வலார் அருகே மழை வெள்ளத்தில் யானைக் குட்டி அடித்துச் செல்லப்பட்டது.
கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதில் சேர்வலார் அணைப் பகுதியில் யானைக் குட்டி ஒன்றின் பிணம் வெள்ளத்தில் மிதந்து வந்தது.
இதையடுத்து வனத் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று யானைக் குட்டியின் பிணத்தை மீட்டனர்.
மழை வெள்ளத்தில் அந்த யானைக்குட்டி அடித்துச் செல்லப்பட்டு வந்திருக்கலாம் என்று வனத் துறையினர் கூறினர்.
-->












Click it and Unblock the Notifications