For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருதுநகரில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பெண்கள் பலி, 24 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியங்குடி என்ற இடத்தில் அசுர வேகத்தில் வந்த அரசுபஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 7பேர் பெண்கள்.

இன்று காலை விருதுநகரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதேபோல,அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது.

இரு பஸ்களும் படு வேகமாக வந்தன. டிரைவர்களின் மூர்க்கத்தனமான வேகத்தால் பயணிகள் பீதியுடன்பயணித்துள்ளனர். புளியங்குடி வந்தபோது, இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் தனியார் பஸ்சின் டிரைவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 7 பேர் பெண்களும்உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பல துண்டுகளாக சிதைந்துவிட்டன.

மேலும் 24 பேர் பலத்த காயமடைந்து விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால், காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ்வர் தயாள்ஆகியோர் பார்வையிட்டனர்.

காயமடைந்த பயணிகள் கூறுகையில், பஸ்கள் மிக பயங்கர வேகத்தில் ஓட்டப்பட்டதாக தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X