அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சாமியிடம் மனு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிவிநாயகரிடம் மனு கொடுத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் உள்ள செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த நிெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅமைச்சர்கள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களிடம் மனு கொடுத்து கொடுத்து ஓய்ந்து விட்டனர். இதையடுத்துநூதனப் போராட்டம் நடத்தி அதிகாரிகளின் கவனத்தைக் கவர திட்டமிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஒரு விநாயகர் கோவிலுக்குச் சென்ற 50க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் குடும்பத்தினர்அரசாங்கத்திடம் தர வேண்டிய மனுவை சாமியிடம் தந்தனர்.
அதன் பிறகு 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்தது.












Click it and Unblock the Notifications