விரைவில் கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இம்மாத இறுதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதகர்நாடக அரசு அதற்காக மன்னிப்பு கேட்டது.

ஆனால் தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சரியான சூடு கொடுத்தது. காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரானபிரதமர் வாஜ்பாய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து வாஜ்பாய் குறித்து தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெறுவதாக ஜெயலலிதா மத்திய அரசுக்கு ஒருகடிதத்தை நேற்று அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும் என்று மத்திய நீர்வளத் துறைஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தமிழக மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து காவிரிகண்காணிப்புக் குழுவினர் ஆய்வு நடத்திய பின்னர் அக்டோபர் 2ம் தேதி தான் காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டம் கடைசியாக நடைபெற்றது.

ஆனால் காவிரி ஆணையம் எப்போது கூடும் என்பது குறித்து தகவல்கள் இல்லை. ஆணையத்தை விரைவாகக்கூட்டி காவிரி விவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடந்தஒரு மாதத்தில் ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 22ம் தேதிக்குள் காவிரி ஆணையம் கூடவுள்ள தேதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசின்வழக்கறிஞர் கிரித் ராவலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+