துபாய் ஷாப்பிங் திருவிழா: இந்தியர்களுக்கு ஈசி விசா
துபாய்:
அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் துபாயில் நடக்கவுள்ள ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் இந்தியர்களுக்கு 3 நாளில்விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாவைப் பெற யாருடைய ஸ்பான்சரும் தேவைப்படாது.
ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை இந்த துபாய் ஷாப்பிங் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இந்தியாவில் 31நகரங்களில் 77 விசா மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இந்தத் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் இந்தியர்களுக்கு 96 மணி நேர பணி விசா வழங்கப்படும். விண்ணப்பித்த 3 வது நாளில் இந்தவிசா தரப்படும்.
எமிரேட் ஏர்லைன்ஸ், துபாய் தங்க வியாபாரிகள், புளூ டார்ட் குரியர்ஸ் ஆகியவை இணைந்து இந்த விசாக்களை உரியவர்களுக்குசேர்பிக்க உள்ளன. இதனால் வழக்கமான தூதரக உதவியை விசா வேண்டுவோர் நாட வேண்டியது இல்லை.
எமிரேட்ஸ் ஏர் மற்றும் எஸ்.ஓ.டி.சி. டிராவல்ஸ் ஆகியவை இணைந்து 599 டாலருக்கு விமான டிக்கெட், தங்கும் வசதி, உணவு வசதி, கைட்உதவியை வழங்க உள்ளன.
1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட துபாய் ஷாப்பிங் திருவிழா சர்வதேச அளவில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக உருவெடுத்துவிட்டது.ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழாவில் கடந்த ஆண்டு 20.68 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications