இரு காரணங்கள்.. இரு உண்ணாவிரதங்கள்..
சேலம்:
சேலம் இரும்பு உருக்காலை தொழிலாளர்கள் வருகிற 21ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிரே உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளனர்.
சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
ஐ.என்.டி.யூ.சி மற்றும் சேலம் உருக்காலை தொழிலாளர் ன்னற்ற சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
பணம் இழந்தவர்கள் உண்ணாவிரதம்:
ராயப்பேட்டை பெனிபிட் பண்ட் நிதி நிறுவனத்திடம் பணம் கட்டி ஏமாந்த முதலீட்டாளர்கள் வருகிற 21ம் தேதி சென்னையில்உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
பணம் கட்டி ஏமாந்த தலீட்டாளர்கள் அனைவரும் இணைந்து சங்கம் ஏற்படுத்தியுள்ளனர். தங்களது பணத்தை விரைவில் தர வலியுறுத்திஉண்ணாவிரதப் போராட்டம் இருப்பது என சங்கக் கூட்டத்தில் முவு செய்யப்பட்டது.
தவறு செய்த ஆர்.பி.எப். குழும தலைவர் சுப்ரமணியம், இயக்குனர் ரெட்டி ஆகியோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.
-->












Click it and Unblock the Notifications