For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் மெட்ராஸ் ஐ (கண்சங்ட்டிவிடிஸ்) எனப்படும் கண் எரிச்சல் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.

வைரஸ்களால் பரவும் இந்த நோய் வழக்கமாக கோடை காலத்தில் தான் தொல்லை தரும். ஆனால், சமீபத்தில்பெய்து முடிந்த கன மழையைத் தொடர்ந்து பலவிதமான நோய்கள் பரவி வருகின்றன.

மெட்ராஸ் ஐயும் பரவி வருகிறது. கருப்புக் கண்ணாடிப் போட்டுக் கொண்டு உலவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதையடுத்து நோயைக் கட்டுப்படுத்த இலவச மருந்துகள் வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடுசெய்துள்ளது.

Eyeகண் நோய் வந்தவர்கள் மூலம் பிறருக்கும் இது வேகமாக பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசசொட்டு மருந்து முகாம்களை சென்னை மாநிகராட்சி நடத்தி வருகிறது.

நகரில் உள்ள 75 மாநகராட்சி மருந்தகங்கள், 110 சுகாதார மையங்கள் மூலம் இந்த மருந்துகள் இலவசமாகவழங்கப்படுகின்றன.

இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். பிறர்க்கு இந்தநோய் பரவாத வகையில் தனித்திருக்க வேண்டும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய சோப்பு, துண்டை அடுத்தவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

இந்த நோய்த் தாக்கினால் குறைந்தபடசம் 3 நாட்களுக்கு கண் எரிச்சல், வீக்கம் இருக்கும்.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X