For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை பார்த்த முதலாளியிடமே கொள்ளை: 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கத்தி முனையில் நகை திருடிய கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை செம்புதாஸ் தெருவில் வசித்து வருபவர் சுல்தான் இப்ராகிம். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர் முகம்மது. தனது தலாளி சுல்தான் இப்ராகிமிடம் ஏராளமான பணம் மற்றும் நகைகள் இருப்பதைஅறிந்தார் முகம்மது.

இதையடுத்து தனது நண்பர்கள் ராஜா மற்றும் ஜாபரிடம் இதுகுறித்துக் கூறினார். 3 பேரும் சேர்ந்து நகை,பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.

தங்களுடன் குமார், முத்துக்குமார், அந்தோணி, சுரேஷ், ஜான்சன், வெங்கடேஷ் ஆகியோரையும் சேர்த்துக்கொண்டனர்.

சுல்தான் இப்ராகிமின் வீட்டு நிலைமை, அவர்கள் வெளியில் செல்லும் நேரம், நகை, பணம் இருக்கும் இடம்ஆகியவை குறித்து தனது நண்பர்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார் முகம்மது.

முழுமையாக திட்டம் தீட்டிய பிறகு கடந்த 3ம் தேதி சுல்தான் இப்ராகிம் வீட்டுக்கு வந்த இக்கும்பல், வீட்டில்இருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியது. இப்ராகிமை தாக்கிக் கட்டிப் போட்ட இவர்கள் வீட்டிலிருந்த பணம்மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதையடுத்து தனிப்படை அமைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்தத் தேடுதல் வேட்டையில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். ஆனால், முக்கியக் குற்றவாளியான முகம்மது இன்னும்சிக்கவில்லை. மேலும் 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிடிபட்டவர்களிடமிருது 38 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களிடம் ஏராளமான நகைகளும்பணமும் உள்ளது. அவர்களைப் பிடிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X