கருணாநிதியைத் திட்டிய பன்னீருக்கு ஆற்காடு பதில்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம்செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து பன்னீர்செல்வம் அறிக்கைவிடுத்திருந்தார். இதற்கு ஆற்காடு வீராசாமி பதில் கொடுத்துள்ளார்.
அதில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, காவிரி நீரை கர்நாடகம் நிறுத்தவில்லை. இரு மாநிலங்களுக்குஇடையேயும் நல்லெண்ணத்தையும், ஒத்துழைப்பையும் அவர் கடைப்பிடித்து வந்ததால் தண்ணீர் கிடைப்பதில்பிரச்சினை எழவில்லை.
ஆனால் இப்போதைய அதிமுக ஆட்சியில் தண்ணீர் நிறுத்தப்பட்டு குறுவை சாகுபடியே செய்யப்படவில்லை. சம்பாபயிருக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.
ஜெயலலிதா அரசின் மோதல் போக்கு காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல்அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஜெயலலிதா மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது புதிதல்ல. முதலில் சந்திரபாபு நாயுடுவுடன் மோதினார், பிறகுகர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் மோதினார்.
இவ்வளவு ஏன், பிரதமர் வாஜ்பாயைக் கூட கடுமையாக விமர்சித்து உச்ச நீதிமன்றத்திடம் "வாங்கிக் கட்டிக்"கொண்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.ஆனால் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர், கர்நாடக முதல்வர் ஆகியோருக்கு கருணாநிதி கடிதம்எழுதியுள்ளார்.
திமுக எம்.பிக்கள் கூட வாஜ்பாயை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட அதில் எடுக்கப்பட்ட முடிவை திமுக ஆதரித்துள்ளது என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
-->
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications