போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: புலிகள் மீது புகார்
கொழும்பு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆயுதங்களுடன் இரு தீவுகளுக்கு பயணம் செய்த விடுதலைப் புலிகளின் மூத்த கமாண்டர்கள்குறித்து நார்வே அமைதிக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் கடற்புலிகள் யாரும் அமைதிப் பார்வையாளர்கள் இல்லாமல் தனியே கடலில் ஆயுதங்களுடன்பிரவேசிக்கக் கூடாது.
ஆனால், புலிகளின் கிழக்கு மண்டல கமாண்டரான கருணா சமீபத்தில் முல்லைத் தீவில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ளவாகரைத் தீவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுடன் கடலில் பயணித்தார். இவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின்சார்பில் பங்கேற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல புலிகளின் திரிகோணமலை மண்டல கமாண்டரான பதுமன் தனது ஆயுதம் தாங்கிய பாதுகாவர்களுடன் கடலில்பயணித்தார்.
கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இவர்கள் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.
இது குறித்து இலங்கை கடற்படையினர் நார்வே அமைதிக் குழுவினரிடம் புகார் தந்துள்ளனர். இதையடுத்து புலிகளின் இந்தச்செயல் குறித்து நார்வே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமைதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரான டெய்டுர்டொர்கெல்சன் கூறுகையில், இச் செயல் பெரும் வருத்தம் தருகிறது. இது தொடர்பாக புலிகளின் தலைமையிடம் புகார் தரப்படும்என்றார்.
வானிலையே காரணம்?
ஆனால், வேண்டுமென்றே கடலில் பிரவேசிக்கவில்லை என புலிகள் இயக்கம் கூறியுள்ளது. இந்தப் பயணம் வழக்கமானது தான்எனவும் தங்களுடன் வர இருந்த அமைதிக் குழுவினர் மோசமான வானிலை காரணமாக வராததால் தாங்கள் தனியேசென்றதாகவும் கூறியுள்ளனர்.
புலிகளை சிறிது பொறுத்திருக்கச் சொன்னதாகவும் வானிலை சரியானவுடன் பயணம் மேற்கொள்ளலாம் என அமைதிக் குழுகூறியதாகவும் ஆனால், அதையும் மீறி புலிகள் தனியே கடல் பயணத்தை மேற்கொண்டதாகவும் அமைதிக் குழுவினர்கூறுகின்றனர்.
புலிகளின் இந்தப் பயணத்தை இரு இலங்கை கடற்படைக் கப்பல்கள் பார்த்தன. ஆனால், இதில் தலையிடவில்லை. புலிகளின்தவறை எங்களிடம் சுட்டிக் காட்டிவிட்டு அவர்கள் அமைதியாக இருந்தனர். கடற்படையினர் காட்டிய பொறுமை மெச்சத்தக்கதுஎன்றார் டெய்டுர் டொர்கெல்சன்.
அமைதியை சீர்குலைக்கும் இது போன்ற செயல்களை எந்தத் தரப்பினர் செய்தாலும் அதை நாங்கள் நிச்சயம் சுட்டிக் காட்டுவோம்,எதிர்ப்போம் என்றார்.
புலிகளின் போலீஸ் ஸ்டேசன்:
இந் நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கவுள்ள 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் போலீஸ்ஸ்டேசன்கள் தேவை தானா என்று கேள்வி எழுப்புவோம் என அமைச்சர் ரவுல் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
முஸ்லீம்கள் நிறைந்த கிழக்குப் பகுதியில் இந்த போலீஸ் ஸ்டேசன்களால் அப் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பிரச்சனைகள்உருவாகியிருப்பதாக அவர் கூறினார்.
ஓஸ்லோ பேச்சுவார்த்தைகளில் இது குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தன்னிடம்உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தான் கிழக்குப் பகுதியில் 2 புதிய போலீஸ் ஸ்டேன்சன்களை புலிகள் திறந்தனர். மேலும் போலீசுக்கு ஆள் எடுப்பதாகவிடுதலைப் புலிகள் விளம்பரம் வெளியிட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications