போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: புலிகள் மீது புகார்
கொழும்பு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆயுதங்களுடன் இரு தீவுகளுக்கு பயணம் செய்த விடுதலைப் புலிகளின் மூத்த கமாண்டர்கள்குறித்து நார்வே அமைதிக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் கடற்புலிகள் யாரும் அமைதிப் பார்வையாளர்கள் இல்லாமல் தனியே கடலில் ஆயுதங்களுடன்பிரவேசிக்கக் கூடாது.
ஆனால், புலிகளின் கிழக்கு மண்டல கமாண்டரான கருணா சமீபத்தில் முல்லைத் தீவில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ளவாகரைத் தீவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுடன் கடலில் பயணித்தார். இவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின்சார்பில் பங்கேற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல புலிகளின் திரிகோணமலை மண்டல கமாண்டரான பதுமன் தனது ஆயுதம் தாங்கிய பாதுகாவர்களுடன் கடலில்பயணித்தார்.
கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இவர்கள் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.
இது குறித்து இலங்கை கடற்படையினர் நார்வே அமைதிக் குழுவினரிடம் புகார் தந்துள்ளனர். இதையடுத்து புலிகளின் இந்தச்செயல் குறித்து நார்வே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமைதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரான டெய்டுர்டொர்கெல்சன் கூறுகையில், இச் செயல் பெரும் வருத்தம் தருகிறது. இது தொடர்பாக புலிகளின் தலைமையிடம் புகார் தரப்படும்என்றார்.
வானிலையே காரணம்?
ஆனால், வேண்டுமென்றே கடலில் பிரவேசிக்கவில்லை என புலிகள் இயக்கம் கூறியுள்ளது. இந்தப் பயணம் வழக்கமானது தான்எனவும் தங்களுடன் வர இருந்த அமைதிக் குழுவினர் மோசமான வானிலை காரணமாக வராததால் தாங்கள் தனியேசென்றதாகவும் கூறியுள்ளனர்.
புலிகளை சிறிது பொறுத்திருக்கச் சொன்னதாகவும் வானிலை சரியானவுடன் பயணம் மேற்கொள்ளலாம் என அமைதிக் குழுகூறியதாகவும் ஆனால், அதையும் மீறி புலிகள் தனியே கடல் பயணத்தை மேற்கொண்டதாகவும் அமைதிக் குழுவினர்கூறுகின்றனர்.
புலிகளின் இந்தப் பயணத்தை இரு இலங்கை கடற்படைக் கப்பல்கள் பார்த்தன. ஆனால், இதில் தலையிடவில்லை. புலிகளின்தவறை எங்களிடம் சுட்டிக் காட்டிவிட்டு அவர்கள் அமைதியாக இருந்தனர். கடற்படையினர் காட்டிய பொறுமை மெச்சத்தக்கதுஎன்றார் டெய்டுர் டொர்கெல்சன்.
அமைதியை சீர்குலைக்கும் இது போன்ற செயல்களை எந்தத் தரப்பினர் செய்தாலும் அதை நாங்கள் நிச்சயம் சுட்டிக் காட்டுவோம்,எதிர்ப்போம் என்றார்.
புலிகளின் போலீஸ் ஸ்டேசன்:
இந் நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கவுள்ள 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் போலீஸ்ஸ்டேசன்கள் தேவை தானா என்று கேள்வி எழுப்புவோம் என அமைச்சர் ரவுல் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
முஸ்லீம்கள் நிறைந்த கிழக்குப் பகுதியில் இந்த போலீஸ் ஸ்டேசன்களால் அப் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பிரச்சனைகள்உருவாகியிருப்பதாக அவர் கூறினார்.
ஓஸ்லோ பேச்சுவார்த்தைகளில் இது குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தன்னிடம்உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தான் கிழக்குப் பகுதியில் 2 புதிய போலீஸ் ஸ்டேன்சன்களை புலிகள் திறந்தனர். மேலும் போலீசுக்கு ஆள் எடுப்பதாகவிடுதலைப் புலிகள் விளம்பரம் வெளியிட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications