For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் எய்ட்ஸ் தாக்குதல் வேகமாக அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக அமெரிக்காவின்தேசிய புலனாய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, எத்தியோப்பியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இப்போது 1.4 கோடி முதல் 2.3 கோடி பேர் வரை எய்ட்ஸ்நோயால் தாக்கப்பட்டுள்ளனர். 2010ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 முதல் 7.5 கோடியாக உயரும் என இந்தக் கவுன்சில்எச்சரித்துள்ளது.

இன்னும் 8 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 2 முதல் 2.5 கோடி பேர் வரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.சீனாவில் 1 முதல் 1.5 கோடி பேரும் நைஜீரியாவில் 1 முதல் 1.5 கோடி பேர் வரையும், எத்தியோப்பியாவில் 70 லட்சம் முதல் 1கோடி பேரும், ரஷ்யாவில் 50 லட்சம் முதல் 80 லட்சம் பேர் வரையும் எய்ட்ஸ் நோயால் தாக்கப்படுவார்கள் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நாடுகளில் 3 கோடி முதல் 3.5 கோடி பேர் வரை எய்ட்ஸால் தாக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இப்போது இது 5முதல் 7.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் பலருடன் உடலுறவு காரணமாகத்தான் இந்தியாவில் செக்ஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும்கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒரே போதை ஊசியை பலர் பயன்படுத்துவதாலும், சீனாவில் சுகாதாரமற்ற ரத்த விற்பனை மூலமும்எய்ட்ஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X