இளம் பெண் என்ஜீனியர் தற்கொலை: குடும்பத்தினருடன் காதலன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இளம் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ரூ.1 லட்சம் வரை பணம் மோசடி செய்து விட்டு, அந்தப்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர்,அவரது தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்தவர் செந்தில்குமார். அப்போது அவருக்குத் தன்னுடன்படிக்கும் விஜயஸ்ரீயுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருவரது பெற்றோரும் கூடசம்மதம் தெரிவித்து விட்டனர்.

ஆனால் தனது சகோதரி இந்துவுக்குத் திருமணம் ஆகும் வரை காத்திருக்குமாறு விஜயஸ்ரீயிடம் கூறினார்செந்தில்குமார்.

இந்த நிலையில் செந்தில்குமாரின் தந்தை சுந்தரம், நவம்பர் 11ம் தேதி தனது மகனுக்கும், விஜயஸ்ரீக்கும் திருமணதேதியை நிச்சயித்தார். இதுகுறித்து விஜயஸ்ரீயின் தந்தை ராமகிருஷ்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமண ஏற்பாடுகள் நிடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று செந்தில்குமாரின் பெற்றோர் சென்னையில்உள்ள விஜயஸ்ரீயின் வீட்டுக்குப் போன் செய்து திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறினர். இதனால்அதிர்ச்சியடைந்த விஜயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் செந்தில்குமாருக்கு விஜயஸ்ரீ அனுப்பியிருந்த ஒரு ஈ-மெயிலில்,ரூ.1.01 லட்சம் பணத்தை செந்தில்குமாரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து செந்தில்குமார், சுந்தரம், சாந்தாமணி ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+