உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி: ஜெ. வழங்கினார்
சென்னை:
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது இறந்த தீயணைப்புப் படை வீரரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம்நிதியுதவி அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் சமீபத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதை அணைக்கும் முயற்சியில்ஈடுபட்டிருந்தபோது தீயணைப்புப் படை வீரர் ஆறுமுகம் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி தருவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி ஆறுமுகததின் தாயார் சந்திரகாந்தாவை கோட்டைக்கு வரவழைத்து அவரிடம் ரூ. 5 லட்சம் நிதி, குடும்பநல நிதியான ரூ.1 லட்சம், இன்சூரன்ஸ் தொகையான ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சத்திற்கான காசோலையைஜெயலலிதா வழங்கினார்.
அதேபோல, டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் தமிழக வீராங்கனை ருஷ்மி சக்கரவர்த்திக்குவெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.4 லட்சம் நிதியையும் முதல்வர் வழங்கினார்.
-->