நாளை முதல் மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நிலச்சரிவு காரணமாக மேட்டுப்பாளையத்திற்கும், குன்னூருக்கும் இடையே நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில்போக்குவரத்து நாளை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக ஊட்டி மலைப் பாதையில் பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டது.
ரயில் தண்டவாளத்தில் பெரிய பெரிய பாறாங்கற்கள் விழுந்தன. இதையடுத்து மலை ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ரயில் பாதை முழுவதும் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதால், நாளை முதல் மலை ரயில்போக்குவரத்து மீண்டும் நடைபெறும் என்று ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications