இந்திய நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிக்கு பாக் விடுதலை
வாஷிங்டன்:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் முகம்மத்சயீதை பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்ததையடுத்து இந்தியா தனது படைகளை பாகிஸ்தான் எல்லையில் குவித்தது.இதையடுத்து அமெரிக்காவின் நெருக்குதலால் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்தது.
லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவனும் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்க திட்டமிட்டவனுமான ஹபீஸ் முகம்மத் சயீதும் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான். இவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரி வந்தது.ஆனால், இக் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டது.
தங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் தண்டிப்பதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், வழக்கமான கண்துடைப்பு விசாரணை நடத்திய பாகிஸ்தான் நீதிமன்றம் சயீதை நேற்று விடுதலை செய்தது.
பாகிஸ்தான் அரசு மற்றும் நீதிமன்றத்தின் இச் செயலுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர் கூறுகையில்,
இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பாகிஸ்தான் விடுவித்துள்ளது சரியல்ல. தீவிரவாதிகளையும், பிற நாடுகளின் மீதுதாக்குதல் நடத்தியவர்களையும் பாகிஸ்தான் உரிய முறையில் தண்டிக்க வேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications