நீதிபதியை தாக்க முயன்ற சம்பவம்: 5 பா.ம.கவினர் கைது
சென்னை:
நீதிபதி தலைமையிலான செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினரை பதவியேற்க விடாமல்தடுத்து கலாட்டாவில் ஈடுபட்ட வழக்கில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார்கைதுசெய்துள்ளனர்.
சென்னையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிக்க நீதிபதியொருவர் தலைமையில்இடைக்கால நிர்வாகக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
ஆனால், இக்குழுவினரைப் பதவியேற்க விடாமல், பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு எம்.எல்.ஏஉள்ளிட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் தகராறு செய்தனர். நிர்வாகக் குழுவினரை தாக்கவும் முயன்றனர்.
இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகக் குழு செயலர் குமார் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்தனர்.
இதில் மணியும், குருவும் தலைமறைவாகி விட்டனர். ஜி.கே.மணி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுசெய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவரைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாமகவைச் சேர்ந்த ஏழுமலை, கருணாகரன், குணா என்ற குணசேகரன், பழனி மற்றும் வன்னியர்சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை ஜாமீனில் வெளி வர முடியாத 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதவிர மேலும் 8பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் மணி, காடுவெட்டி குரு ஆகியோரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
-->