For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிச.1 முதல் எழும்பூர்-பீச் மின்சார ரயில் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னைஎழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்களுக்கிடையே மின்சார ரயில் போக்குவரத்து டிசம்பர் 1ம் தேதி முதல் ரத்துசெய்யப்படவுள்ளது.

சென்னை தாம்பரம் முதல் எழும்பூர் வரையிலும் தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர்முதல் கடற்கரை வரையிலான பாதை மட்டுமே இன்னும் மீட்டர் கேஜ் பாதையாக உள்ளது. தற்போது இந்தபாதையும் அகல ரயில் பாதையாக மாற்றப்படவுள்ளது.

இதையொட்டி டிசம்பர் 1ம் தேதி முதல் எழும்பூர்-கடற்கரை வரையிலான மின்சார ரயில் போக்குவரத்து ரத்துசெய்யப்படுகிறது. டிசம்பர் 1ம் தேதிக்கு மேல் தாம்பரத்திலிருந்து எழும்பூர் வரை மட்டுமே மின்சார ரயில்கள்இயக்கப்படும்.

இருப்பினும் தாம்பரத்திலிருந்து, கடற்கரை வரையிலான அகலப் பாதை ரயில்கள் வழக்கம் போல இயங்கும்.

கடற்கரை வரை மின்சார ரயில்கள் நிறுத்தப்படுவதால், கடற்கரை வரை செல்ல வேண்டிய பயணிகளின் வசதிக்காகபஸ் வசதி செய்யப்படவுள்ளது. இதற்காக எழும்பூர் ரயில் நிலையம் அருகே தற்காலிகமாக பஸ் நிலையம்ஏற்படுத்தப்படுகிறது.

இங்கு கடற்கரை வரை மட்டுமே செல்லக் கூடிய பஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். எழும்பூர் வந்துஇறங்கும் பயணிகள் இந்த பஸ்களில் ஏறினால் அவர்கள் கடற்கரை ரயில் நிலையம் வரை செல்லலாம். இதில்பயணக் கட்டணம் ரூ.3 என நர்ணயிக்கப்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X