கோவிலில் தாலி கட்டியது ஏன்?: கருணாநிதிக்கு வி.எச்.பி. கேள்வி
ராமநாதபுரம்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் இந்துக்களையும், இந்து மதம் குறித்தும் இழிவுபடுத்திப் பேசிவருகிறார் என்று தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் வேதாந்தம் கூறினார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பகுத்தறிவுவாதம் பற்றிப் பேசும் கருணாநிதி தனது இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளை திருவேற்காடுகோவிலுக்கு கூட்டிச்சென்று, கோவிலில் இருந்த எல்லோரையும் வெளியேற்றி விட்டு அவரது கழுத்தில் இருந்ததாலியைப் பிரித்து மீண்டும் கட்டினார்.
இதை அப்போது அனைத்துப் பத்திரிக்கைகளும் செய்தியாக வெளியிட்டன. பரிணாம வளர்ச்சி என்றெல்லாம் ஒருபத்திரிக்கை கார்ட்டூன் போட்டது.
இதை எந்த வகையான பகுத்தறிவுவாத செயல் என்று கருணாநிதி கூறுவார்?
அவருக்கு வயதாகி விட்டது. அதனால் தான் சும்மா இருக்க முடியாமல், இந்துக்களையும், இந்து மதத்தையும்இழிவுபடுத்திப் பேசி வருகிறார் என்றார் வேதாந்தம்.
-->












Click it and Unblock the Notifications