மாஜி திமுக அமைச்சர்களின் சொத்துக்கள்: ஆதாரங்கள் சிக்கின?
மதுரை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அளவிட முடியாத அளவுக்கு சொத்துசேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி திலகவதி கூறினார்.
குறிப்பாக திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், பொன்முடி, சமயநல்லூர் செல்வராஜ், ஜெனீபர்சந்திரன் ஆகியோர் பல கோடிக்கு சொத்துக்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதிலும் திமுக தலைமைக்கு மிக நெருக்கமான பொன்முடிக்கு பெட்ரோல் பங்குகள், ஹீரோ ஹோண்டா ஷோரூம்கள், பங்களாக்கள் என பெரும் சொத்துக்கள் உள்ளன.
துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கும் இதே போல கணக்கில் அடங்கா சொத்துக்கள் உள்ளன.வீரபாண்டி ஆறுமுகம் சேலத்தில் முக்கிய இடங்களை வளைத்துப் போட்டுள்ளார். இவரது மகன் கட்டப் பஞ்சாயத்துசெய்தே கோடிகளை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெனீபர் சந்திரன் அமைதியாக இருந்து கொண்டே தூத்துக்குடி மற்றும்அதைச் சுற்றிய பகுதிகளில் சொத்துக்களைக் குவித்துள்ளார். இவரது தந்தை பெரியசாமி மாவட்டத் தலைவராகஉள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திலகவதிகூறியதாவது:
முன்னாள் திமுக அமைச்சர்கள் சொத்து குவித்துள்ளது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சுதந்திரமானமுறையில் விசாரணை நடத்தி வருகிறோம்.
யாருடைய நிர்ப்பந்தம் இதுவரை எங்களுக்கு இல்லை. ஒரு சுதந்திரமான, சுயேச்சையான அமைப்பு தான்எங்களுடைய லஞ்ச ஒழிப்புத் துறை.
நீதித் துறையில் நடக்கும் ஊழல்கள், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில், கண்டுபிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறோம். யார் தவறு செய்தாலும் அவர்களை சும்மா விட மாட்டோம்.
முன்னாள் திமுக அமைச்சர்கள் வெளிநாட்டிலும், தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அதிக அளவில்சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். அளவிட முடியாத அளவுக்குக் கூட சிலர் சொத்துக்களைக்குவித்துள்ளனர்.
இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறையவே உள்ளன. பெரும்பாலான சொத்துக்கள் பினாமி பெயர்களில் தான்உள்ளன. சிலரது வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்துள்ளது.
விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்தவுடன்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்திலகவதி.
துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ஜெனீபர் சந்திரன் ஆகியோர் தவிர முன்னாள் அமைச்சர்சமயநல்லூர் செல்வராஜ் மற்றும் மதுரையின் முன்னாள் மேயர் குழந்தைவேலு மீதும் ஆகியோர் மீதுவருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் திடீரென்று தொடர்சோதனைகளில் ஈடுபட்டதும் நினைவிருக்கலாம்.
-->












Click it and Unblock the Notifications