For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன 12 மீனவர்களுக்காக 8 மாதங்களாக காத்திருக்கும் குமரி கிராமம்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் இன்னும் திரும்பாமல் உள்ள 12 மீனவர்களை எதிர்பார்த்துகன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதி "உலக மீனவர் தின"மாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி இந்த மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர்.

ஒரு வாரத்திற்குள் திரும்பி விடும் வழக்கம் கொண்ட அவர்கள் ஒரு வாரமாகியும் திரும்பவில்லை. இதனால்அவர்களது உறவினர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தேடுதல் வேட்டையும் தொடங்கியது. ஆனால்மீனவர்கள் குறித்துத் தகவல் இல்லை.

இப்படியே எட்டு மாதங்கள் வரை ஓடி விட்டது. இன்னும் கூட 12 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

"உலக மீனவர் தினம்" கொண்டாடப்படும் இந்த வேளையிலாவது, காணாமல் போன மீனவர்களை மீட்கஅதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 12 மீனவர்களின் உறவினர்களும் கைகூப்பி கோரிக்கைவைத்துள்ளனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X