For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தவர் விஷ வாயு தாக்கி சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷ வாயு தாக்கிதொழிலாளி பரிதாபமாக பலியானார்.

ஆயிரம் விளக்குப் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் கழிவு நீர்த்தொட்டியை சக்திவேல் மற்றும் பாலாஜி ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை விஷ வாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக இது குறித்துதீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X