வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினைஎழுப்புவார்கள் என்று மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னையில் இன்று பேரணிநடத்தப்பட்டது.
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் துவங்கிய இந்தப் பேரணி மாலையில் பூந்தமல்லியில் முடிவடைகிறது. அங்குகண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், எல். கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன்,செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.
முன்னதாக பேரணியைத் துவக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கணேசன் பேசுகையில்,
வைகோ விவகாரம் குறித்து மதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கிருஷ்ணன் எம்.பி மட்டுமே உள்ளார்.மற்ற இருவரும் அமைச்சர்களாக உள்ளதால் அவர்களால் பேச முடியாது.
திமுகவே கூட இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும். பொடா சட்டத்தை திமுகவைச்சேர்ந்த அமைச்சர் முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து வந்தார் என்பதை மறந்து விடக் கூடாது என்றார்கணேசன்.
-->