சென்னைக்குள் நுழைய தடை: எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வழக்கு
சென்னை:
சென்னை நகரிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாற்றும் அரசின்முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,
பொது சேவை வாகனங்களை இயக்குவதற்கான பஸ் நிலையம் கட்டும் முன்பு மண்டல போக்குவரத்துஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் 245வது ஏ பிரிவுகூறுகிறது.
கோயம்பேடு பஸ் நிலையத்தைப் பொறுத்தவரை, அயனாவரத்தில் உள்ள மண்டல போக்குவரத்து ஆணையரிடம்அனுமதி பெறப்படவில்லை. இதற்கான அனுமதியைப் பெற வேண்டிய சென்னை மாநகராட்சியும் அனுமதி கோரிவிண்ணப்பிக்கவில்லை.
மேலும், பஸ் நிலையத்தைக் கட்டி முடித்தவுடன், சென்னை மாநகராட்சியிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
மேலும், ஆம்னி பஸ்களை தினசரி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நகருக்குள் வந்து செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்குக் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
எனவே ஆம்னி பஸ்கள் நகருக்குள் நுழையக் கூடாது என்று அரசு போட்டுள்ள உத்தரவை செல்லாது என்றுஅறிவித்து கோர்ட் உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
-->