ஊட்டி மலை ரயில் என்ஜினில் கோளாறு: பாதி வழியில் நின்றது
ஊட்டி:
ஊட்டி மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தடைபட்டுள்ளது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் பாதிவழியிலேயே அந்த ரயில் நிறுத்தப்பட்டு விட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக கல்லாறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தவிரபல்வேறு இடங்களில் கற்கள் விழுந்து கிடந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்பாதை சரி செய்யப்பட்டு இன்று முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை ரயில் திட்டமிட்டபடி கிளம்பியது. ஆனால் கல்லாறு ரயில்வே கேட் அருகேசென்றபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். பஸ்களிலும், கார்களிலும் அவர்கள் ஊட்டிசென்றனர்.
மீண்டும் எப்போது மலை ரயில் இயக்கப்படும் என்று தெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications