பாகிஸ்தான் பிரதமராக முஷாரபின் ஜால்ரா தேர்வு
இஸ்லாமாபாத்:
ராணுவ ஆட்சியாளர் முஷாரபின் ஜால்ராவான மிர் ஜபருல்லா கான் ஜமாலி இன்று பாகிஸ்தானின் 19வது பிரதமராகத்தேர்ந்தெடுத்தப்பட்டார்.
ராணுவத்தின் ஆதரவுடன் நிறுத்தப்பட்ட அவர் நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் 172 வாக்குகளைப் பெற்றார்.தலிபானை ஆதரிக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பஸ்லூர் ரஹ்மான் 86 வாக்குகளையும் பெனாசிர்பூட்டோவின் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட குரேஷி 70 வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தலிபான் ஆதரவு மதவாதக் கட்சி தான் அதிக இடங்களில் வென்றது. இதனால் இந்ததீவிரவாதக் கட்சிகளின் கூட்டணித் தலைவரான பஸ்லூர் ரஹ்மான் தான் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. ஆனால், அவரைஆட்சியில் அமர்த்த அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால், தீவிரவாதக் கூட்டணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மிதவாதியாக இருக்கும் ஒருவரை, தான் சொல்வதைக் கேட்டுநடக்கும் ஒருவரை பிரதமராக்க வேண்டிய கட்டாயத்துக்கு முஷாரப் ஆளானார். அப்படித்தான் ஜபருல்லா கான் தேர்வுசெய்யப்பட்டார்.
இவர் இஸ்லாமிய தீவிரவாத கட்சிக் கூட்டணியில் இருந்தாலும் முஷாரபை ஆரம்பத்தில் இருந்தே முஷாரபை ஆதரித்து வந்தார்.
இதனால் அவரை பிரதமர் பதவிக்கு நிறுத்தி மற்ற கட்சியினரின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவமேநேரடியாக ஈடுபட்டது. இதற்காக பெரும் பணத்தையும் முஷாரப் செலவிட்டார். ஒருவழியாய் போதிய எம்.பிக்களை வாங்கிமுடித்துவிட்ட நிலையில் இன்று பிரதமர் தேர்வு நடந்தது.
இதில் எதிர்பார்த்தது போலவே ஜபருல்லா கான் வென்றார்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கடந்த 1999ம் ஆண்டில் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தார் முஷாரப். இப்போது தனதுஆட்சி காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தானாகவே நீட்டித்துக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் தனது ஜால்ராவான ஜலாலியை பிரதமராக்கியுள்ளார் முஷாரப்.
-->












Click it and Unblock the Notifications