பாமக தலைவரை தேடி சென்னை போலீஸ் பெங்களூர் விரைவு
சென்னை:
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை மோதல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணியைப்பிடிக்க சென்னை போலீஸார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிதங்கமணி தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தான் இந்தக் குழுவைஅமைத்தது.
ஆனால், இந்தக் குழுவை பதவியேற்க விடாமல் தடுத்ததாக ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட பாமகவினர்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மணியும், குருவும் தலைமறைவாகி விட்டனர்.
இந் நிலையில் மணியையும், குருவையும் பிடிக்க 9 தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடந்துவருகிறது. இதற்கிடையே, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மேலும் குமார், பார்த்திபன், ரவீந்திரன் ஆகிய 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது ஜி.கே.மணி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக சென்னை போலீஸ் தனிப் படை பெங்களூர் விரைந்துள்ளது.
-->