சைதை துரைசாமி பதவி பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி திடீரென்றுஅப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவரான சைதை துரைசாமி எம்.ஜி.ஆர். காலத்திலிருந்துஅதிமுகவில் இருந்து வருபவர்.
தென் சென்னை மக்களின் செல்வாக்கைப் பெற்ற அவர் இடையில் சிறிது காலம் அதிமுகவில் தீவிரமாகசெயல்படாமல் இருந்தார். பின்னர் அவர் சமீபத்தில் தான் ஜெயலலிதாவால் தென் சென்னை மாவட்ட அதிமுகசெயலாளராக நியமிக்கப்பட்டார்.
சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தலில் இவர் தான் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டநிலையில் நடிகர் ராதாரவி நிறுத்தப்பட்டார். இருந்தாலும் மனம் தளராது, ராதாரவிக்காக கடுமையாக உழைத்துவெற்றிக் கனியைப் பறித்து ஜெயலலிதாவிடம் வழங்கினார் சைதை துரைசாமி.
இந்நிலையில் சைதை துரைசாமி திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கவுன்சிலர்ராஜேந்திரபாபு தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒத்துழைப்பு தர அதிமுகவினருக்க ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சைதை துரைசாமியின் திடீர் நீக்கம் தென் சென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications