அருவிகளில் திடீர் வெள்ளம்: ஜிலுஜிலுக்கிறது குற்றாலம்
குற்றாலம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டோகொட்டென்று கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வட கிழக்குப் பருவ மழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்டஆரம்பித்துள்ளது.
முக்கியமான அருவியான மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அபரிமிதமாக கொட்டி வரும் தண்ணீர் காரணமாக தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்டபல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் சாரை சாரையா குற்றாலத்திற்குப் படையெடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து தமிழகத்தின் பிற ஊர்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் குற்றாலத்துக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
அருவிகளில் தண்ணீர் மிக அதிக வேகத்தில் கொட்டுவதால் மிகவும் கவனத்துடன் குளிக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தான் குற்றால சீசன் களை கட்டும். தற்போது திடீர் சீசன் காரணமாக கடும் குளிரையும் மீறி ஏராளமானசுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்து கொண்டிருப்பதால் குற்றாலம் களை கட்டத் தொடங்கியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications