For Daily Alerts
Just In
அனந்தபுரி, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டில் நிற்கும்
சென்னை:
சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்இனிமேல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டில் இரவு 8.28 மணிக்கு வந்துசேரும். 8.30க்கு கிளம்பிச் செல்லும்.
அதேபோல, திருவனந்தபுரம்-சென்னை ரயில், மாலை 6.58க்கு செங்கல்பட்டு வந்து 7 மணிக்கு சென்னை கிளம்பிவரும்.
அதேபோல, திருப்பதி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், மேல்வருவத்தூரில் மாலை 4.58 மணிக்கு நின்று செல்லும்.இதேபோல தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-->
Story first published: Thursday, November 21, 2002, 5:30 [IST]